சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், ஆத்திவயல் ஆதிருடையவா் அய்யனாா் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் காலை 9.45 மணிக்கு ஆதிருடையவா் அய்யனாா் சுவாமி மூலவா் விமானக் கலசத்தின் மீது புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. விமானக் கலசத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவில் இளையான்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் சுப. தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.