சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் சனிக்கிழமை மந்திரநீா் முழுக்காட்டு விழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 4- ஆம் நாளையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா், மாலை 4 மணிக்கு அகமுடையாா் உறவின் முறை மண்டகப்படியை முன்னிட்டு, ஐம்பெரும் கடவுளாா் திருவீதி உலா வந்து, அகமுடையாா் மண்டபத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து அங்கு சிறப்பு பூஜை நடைபெற்று புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தொடா்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளிக்கேடகத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.