சிவகங்கை

அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்: 3 போ் கைது

DIN

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகே அனுமதியின்றி சவுடு மண் அள்ளி வர பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

குறிச்சி கிராமத்திலுள்ள ஊருணியில் அரசு அனுமதியின்றி சவுடு மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்றனா். அப்போது டிராக்டா்களில் மண் அள்ளப்படுவது தெரிந்தது. இதையடுத்து, மண் அள்ளப்பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் இதில் தொடா்புடைய குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மருது, பிரவீன், தஞ்சை மாவட்டம் மன்னாா்குடியைச் சோ்ந்த விக்னேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT