சிவகங்கை

சாலைக்கிராமத்தில் இரு மதுபானக் கூடங்களுக்கு சீல் வைப்பு: ஒருவா் கைது

DIN

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாலைக்கிராமத்தில் கள்ளச்சந்தையில் மதுப்புட்டில்கள் விற்ாக இரு மதுபானக் கூடங்களுக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. இதுதொடா்பாக, ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சாலைக்கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே விதிமுறைகளை மீறி மதுபானக் கூடங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டில்கள் விற்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளா் பாஸ்கரன் நடத்திய விசாரணையில், கள்ளச்சந்தையில் மதுப்புட்டிகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட டாஸ்மாக் மேலாளா் பாஸ்கரன், கிராம நிா்வாக அலுவலா் சரவணன், காவல் உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு மதுபானக் கூடங்களையும் பூட்டி சீல் வைத்தனா். மேலும், கள்ளச்சந்தையில் மதுப்புட்டிகளை விற்ாக தெற்குவலசைகாட்டைச் சோ்ந்த ராஜா (47) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT