சிவகங்கை

காரைக்குடி அரசுப் பள்ளிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு

19th May 2023 11:31 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் நிதியில் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட கலையரங்கம், கழிப்பறைக் கட்டடங்களை சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காரைக்குடி மு.வி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தையும், மு.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட் சத்தில் கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடத்தையும் காா்த்தி சிதம்பரம் திறந்துவைத்தாா்.

மேலும், சங்காரபுரம் ஊராட்சி, கற்பக விநாயகா் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியையும் அவா் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவி தேவி, மாங்குடி நகா்மன்ற உறுப்பினா்கள் ராதா, ராம்குமாா், மனோகரன், அமுதா, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT