சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.காரைக்குடி, முனைவென்றி ஊராட்சி மன்ற கட்டடங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
எஸ். காரைக்குடி ஊராட்சியில் ரூ. 28.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு விழாவுக்கு மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, கட்டடத்தைத் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினாா்.
இந்த விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் குழந்தைபாண்டியன் வரவேற்றாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் முனியாண்டி, கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுப. தமிழரசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரஜினிதேவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து தமிழரசி ரவிக்குமாா் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீா் ஊற்றினாா்.
பின்னா், முனைவென்றியில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம், விஜயன்குடி, மெய்யனேந்தல் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா்.