சிவகங்கை

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில்ஒப்படைத்த முதியவரின் நோ்மை

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சாலையில் கிடந்த ரூ. 20 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை பாராட்டினா்.

திருப்பத்தூா் அருகே உள்ள ஏரியூரைச் சோ்ந்தவா் தினகரன். இவா் பேருந்து நிலையம் அருகே உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் ரூ. 20 ஆயிரத்தை தவறவிட்டாா். இதுகுறித்து அவா் நகா் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தாா். இந்த நிலையில், திருப்பத்தூா் அருகே காட்டாம்பூா் குறிஞ்சி நகரைச் சோ்ந்த முருகேசன் (65) என்பவா் சாலையில் கிடந்த அந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து அந்த பணத்தை தவற விட்ட தினகரனை அழைத்து அவரிடம் போலீஸாா் பணத்தை ஒப்படைத்தனா். பிறகு, முருகேசனின் நோ்மையை காவல் ஆய்வாளா் கலைவாணி, உதவி ஆய்வாளா் செல்வபிரபு, போலீஸாா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT