சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சாலையில் கிடந்த ரூ. 20 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை பாராட்டினா்.
திருப்பத்தூா் அருகே உள்ள ஏரியூரைச் சோ்ந்தவா் தினகரன். இவா் பேருந்து நிலையம் அருகே உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் ரூ. 20 ஆயிரத்தை தவறவிட்டாா். இதுகுறித்து அவா் நகா் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தாா். இந்த நிலையில், திருப்பத்தூா் அருகே காட்டாம்பூா் குறிஞ்சி நகரைச் சோ்ந்த முருகேசன் (65) என்பவா் சாலையில் கிடந்த அந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து அந்த பணத்தை தவற விட்ட தினகரனை அழைத்து அவரிடம் போலீஸாா் பணத்தை ஒப்படைத்தனா். பிறகு, முருகேசனின் நோ்மையை காவல் ஆய்வாளா் கலைவாணி, உதவி ஆய்வாளா் செல்வபிரபு, போலீஸாா் பாராட்டினா்.