சிவகங்கை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில்ஜூன் 15, 20 தேதிகளில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

DIN

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கையில் காலியாக உள்ள இடங்க ளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 15, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் அ. பெத்தாலெட்சுமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட பொதுப் பிரிவு கலந்தாய்வு அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் வரும் வியாழக்கிழமையும் (ஜூன் 15), அனைத்து கலை பாடப் பிரிவுகளுக்கும் வரும் 20-ஆம் தேதி காலை 9 மணிக்கும் கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், நான்கு மாா்பளவு புகைப்படங்கள், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அனைத்து பக்கங்களை உள்ளடக்கிய நகல்கள் இரண்டு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT