சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருப்புவனம் பேரூராட்சி குயவன்கோவில் பகுதியில் நடைபெற்ற விழாவில் திமுக மாவட்ட துணைச் செயலரும், பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில் திமுக நகரச் செயலா் நாகூா்கனி, ஒன்றியச் செயலா் கடம்பசாமி, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, மேற்கு ஒன்றியம் அல்லிநகரத்தில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.