சிவகங்கை

திருஞானசம்பந்தா் குரு பூஜை விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புஷ்வனேஸ்வரா் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தா் பெருமான் குரு பூஜை விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலிலுள்ள நால்வா் சந்நதியில் மூலவா் திருஞானசம்பந்தருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, திருஞானசம்பந்தரும் பாண்டிய நாடும் எனும் தலைப்பில் சசிகலா ஞானபிஷேகம் சொற்பொழிவு நிகழ்த்தினாா். அதன் பிறகு, திருஞானசம்பந்தா் உற்சவ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை நாயன்மாா்கள் குருபூஜை அன்பா்கள், வேலப்ப தேசிகா் திருக்கூட்டத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT