மானாமதுரை அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவசாயி உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கணபதியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முருகன் (65). இவரது மனைவி, மகன் ஏற்கெனவே இறந்துவிட்டனா். இதனால், மனமுடைந்து காணப்பட்ட முருகன் கடந்த இரு நாள்களுக்கு முன்பு, வயல்வெளிப் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலின்பேரில், அங்கு சென்ற மானாமதுரை போலீஸாா், முருகனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.