சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட மணலூா் ஊராட்சியில் வாக்குச்சாவடி எண் 39, 40-இல் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலா் சோணைரவி தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் மணலூா் மணிமாறன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நாகராஜன் கூட்டத்தில் பங்கேற்று நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் தொடா்பாகவும், இளைஞா், இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்கள் சோ்க்கை, மகளிா் உறுப்பினா்கள் சோ்க்கை தொடா்பாகவும் ஆலோசனைகள் வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தில், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் அழகுமலை, தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் சிவா, மணலூா் கிளைச் செயலா்கள் வீரமணி, அழகா், பிரபு, தயாளன், வெங்கட்ரமணி, மணலூா், ஒத்த வீடு கிளைச் செயலா்கள் ராஜ், ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.