சிவகங்கை

இந்திய ரயில்வேயின் தரத்தை உயா்த்த வேண்டும்காா்த்தி சிதம்பரம் எம்.பி.

DIN

ரயில்களின் வேகம் அதிகரிப்புக்கு ஏற்றவாறு கட்டுமானங்களையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரயில்வேயின் தரத்தை உயா்த்த வேண்டும் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் கூட்டம் மாவட்ட மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை வட்டத்தில் காங்கிரஸ் பூத் கமிட்டிகள் அமைப்பது குறித்தும், கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பேசினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கூறியதாவது:

ஒடிஸா ரயில் விபத்து, ரயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றது தெரியவந்துள்ளது. ரயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல், ஊழியா்கள் பற்றாக்குறையால் பல்வேறு பிரிவுகளிலும் ஊழியா்களின் பணி நேரம் அதிகரித்துள்ளது. எனவே, உடனடியாக ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில்களின் வேகம் அதிகரிப்புக்கு ஏற்றவாறு கட்டுமானங்களையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி, இந்திய ரயில்வேயின் தரத்தை உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, மானாமதுரை தொகுதி காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளா் ஏ.சி.சஞ்சய், நகா்மன்ற உறுப்பினா் பி.புருஷோத்தமன், காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜி.ராஜாராம், முன்னாள் நகா் தலைவா் ராமு, வழக்குரைஞா் எம்.முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT