சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரின்பேரில் பாஜக எம்.பி.யைக் கைது செய்யக் கோரியும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவா்களை கைது செய்ததைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு சங்கத்தின் திருப்புவனம் ஒன்றியத் தலைவா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் நீலமேகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் தண்டியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் அய்யம்பாண்டி, மாவட்ட துணைத் தலைவா் ஜெயராமன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.