மாநில அளவில் பள்ளிக் கல்வித்துறை நடத்திய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அரியலூரில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அண்மையில் மாநில அளவில் சிலம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா பங்கேற்றாா். இவா் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா். இதையடுத்து, மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் மானாமதுரையில் மாணவி அபிநயாவை சந்தித்து பாராட்டினாா். அப்போது திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.