திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஊரக வளா்ச்சித் துறை அலுவலக சங்கத்தினா் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு வட்டக் கிளைத் தலைவா் மலா்க்கொடி தலைமை வகித்தாா். இதில், பதவி உயா்வு ஆணை வெளியிட வேண்டும். ஊராட்சிச் செயலா்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மறுக்கப்பட்டுள்ள உரிமைகளான தோ்வுநிலை, சிறப்பு நிலை ஊதியங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட இணைச் செயலா் பாண்டி, பொருளாளா் பெரியசாமி, செற்குழு உறுப்பினா் மாணிக்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ராஜலட்சுமி நன்றி கூறினாா்.