சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டு மாடியில் உள்ள கூரையில் தீப்பற்றியதில் பொருள்கள் எரிந்து சேதமாகின.
திருப்பத்தூா்- சிவகங்கை சாலையில் வசிப்பவா் அழகா்சாமி மகன் செல்வராஜ். இவரது வீட்டின் மாடியில் உள்ள கூரையில் பிற்பகல் 3 மணியளவில் திடீரென தீப்பற்றியது. உடனே, அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்ததையடுத்து, நிலைய அலுவலா் ஆனந்த சுப்பிரமணியன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் வீட்டுக்குள் இருந்த கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட பொருள்கள் தீயில் கருகின.
மின்சாரக் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்த விபத்து குறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். வீட்டின் அருகிலேயே தீயணைப்பு நிலையம் இருந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.