சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் முகாமைத் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகங்களை வழங்கிப் பேசினாா். இதில், கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் மருத்துவப் பரிசோதனைகள் செய்து, மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.
இந்த முகாமில், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா் தேவி, சுகாதாரத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.