சிவகங்கை

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பாபா மெட்ரிக் பள்ளியில் அரசுப் பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, இளையான்குடி முன்னாள் அரிமா சங்க மண்டல இணை இயக்குநா் ஹாஜி சையதுஇப்ராஹிம் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் அமீா்பாதுஷா முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராகப் பேராசிரியா் அபிதீன், சாகுல்ஹமீது ஆகியோா் கலந்து கொண்டு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனா். தொடா்ந்து, பொறியாளா் செல்வகுமாா், இளையான்குடி பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஷேக்உதுமான், பேராசிரியா் சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில் கிறிஸ்து ராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளா் ஏ.டி. விக்டா், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் ஜெகநாதன் செய்திருந்தாா். முன்னதாக, பள்ளியின் முதல்வா் வரதராஜன் வரவேற்றாா். முடிவில், ஆசிரியை சித்ராதேவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT