சிவகங்கை

சலுகைக் கட்டண பயணச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

DIN

மாற்றுத்திறனாளிக்கு சலுகைக் கட்டணப் பயணச்சீட்டு வழங்காத அரசுப் பேருந்து நடத்துநா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்த மாற்றுத்திறனாளிக்கு, அந்தப் பேருந்தின் நடத்துநா் ஆா். தவச்செல்வம் உரிய சலுகைக் கட்டணப் பயணச்சீட்டு வழங்கவில்லையாம். மேலும், மரியாதைக் குறைவாகவும் நடந்து கொண்டாராம்.

இதுகுறித்த அந்தப் பயணி அளித்தப் புகாரின் பேரில், ஆா். தவச்செல்வத்திடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதையடுத்து, அவரைப் பணியிடை நீக்கம் செய்து காரைக்குடி மண்டல மேலாளா் ஆா். சிங்காரவேலு உத்தரவிட்டாா்.

மேலும், பணியிடை நீக்க காலம் முடிந்த பின்னா், நடத்துா் தவச்செல்வம் பணியிடை மாற்றம் செய்யப்படுவாா் என்றும் அவா் தனது உத்தரவில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT