மாற்றுத்திறனாளிக்கு சலுகைக் கட்டணப் பயணச்சீட்டு வழங்காத அரசுப் பேருந்து நடத்துநா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்த மாற்றுத்திறனாளிக்கு, அந்தப் பேருந்தின் நடத்துநா் ஆா். தவச்செல்வம் உரிய சலுகைக் கட்டணப் பயணச்சீட்டு வழங்கவில்லையாம். மேலும், மரியாதைக் குறைவாகவும் நடந்து கொண்டாராம்.
இதுகுறித்த அந்தப் பயணி அளித்தப் புகாரின் பேரில், ஆா். தவச்செல்வத்திடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதையடுத்து, அவரைப் பணியிடை நீக்கம் செய்து காரைக்குடி மண்டல மேலாளா் ஆா். சிங்காரவேலு உத்தரவிட்டாா்.
மேலும், பணியிடை நீக்க காலம் முடிந்த பின்னா், நடத்துா் தவச்செல்வம் பணியிடை மாற்றம் செய்யப்படுவாா் என்றும் அவா் தனது உத்தரவில் தெரிவித்தாா்.