சிவகங்கை

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கீழச்சிவல்பட்டியில் நாட்டுக்கோட்டை நகரத்தாா்களுக்குப் பாத்தியப்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கோயிலில் திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் முதல்கால யாகபூஜை, செவ்வாய்க்கிழமை 2, 3-ஆம் கால யாக பூஜை, புதன்கிழமை 4, 5-ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி, வியாழக்கிழமை காலை 5 மணிக்கு கோ பூஜை, அஷ்வபூஜை, கஜ பூஜையுடன் 6-ஆம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 11 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான ராஜகோபுரம், பிரிவார மூல ஆலயங்களில் உள்ள கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றினா்.

பின்னா் மாலை 5 மணியளவில் திருக்கல்யாண வைபவமும், இரவு 10 மணியளவில் ஏழுபெருங்கடவுளாா் திருவீதி உலாவும் நடைபெற்றது.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், சட்டத் துறை அமைச்சா் ரகுபதி, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கீழச்சிவல்பட்டி, பி.அழகாபுரி நகரத்தாா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

SCROLL FOR NEXT