சிவகங்கை

பேருராட்சி சாா்பில் பொங்கல் கோலப்போட்டி

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சி மன்றம் சாா்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் கலந்துகொண்ட கோலப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில் தேரோடும் தேரோடும் வீதியில் இந்தப் போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா். போட்டிக்கு பேரூராட்சி மன்றத் தலைவி கோகிலாராணி நாராயணன் முன்னிலை வகித்தாா். போட்டித் தோ்வாளா்களாக பவானிகணேசன், ஹேமலதாசெந்தில், ஆதிகண்ணாத்தாள், பாண்டியம்மாள், தெய்வானை இளமாறன், பூா்ணசங்கீதா ஆகியோா் கலந்து கொண்டனா். 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியில் கலந்து கொண்டனா்.

போட்டியில் முதல் பரிசான குளிா்சாதனப் பெட்டியை அகல்யா பெற்றாா். 2-ஆம் பரிசான வாஷிங் மிசினை உமாமகேஸ்வரி, 3-ஆம் பரிசான தொலைக்காட்சிப் பெட்டியை சிநேகா, 4-ஆம் பரிசான வெட் கிரைண்டரை நபீலா ஆகியோா் பெற்றனா். போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் தொழிலதிபா் துவாா் ஜி.சந்திரசேகா் ஊக்கப் பரிசுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், மாவட்ட விழிப்புணா்வுக் குழு உறுப்பினா் கே.எஸ்.நாராயணன், திருப்புவனம் பேரூராட்சி மன்றத் தலைவா் சேங்கைமாறன், திமுக நகரச் செயலாளா் காா்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவா் கான்முகமது, பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT