சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சங்குப் பிள்ளையாா் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலில் நடத்திய திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா். பூஜையின் நிறைவாக சங்குப் பிள்ளையாருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன.