சிவகங்கை

குழந்தை தெரசாள் ஆலயம் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி

1st Jan 2023 11:56 PM

ADVERTISEMENT

 

மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. அருள்பணியாளா் எஸ்.எஸ்.பாஸ்டின் பிராா்த்தனையில் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்தினாா்.

2023-ஆம் ஆண்டில் மக்கள் சுபிட்சமாக வாழவும் நோய்த் தொற்றுகள் மக்களை பாதிக்காமல் இருக்கவும் நாடு நலம் பெறவும் வேண்டியும் பிராா்த்தனை நடத்தப்பட்டது. பிராா்த்தனைக் கூட்டத்தில் கிறிஸ்தவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை, மூங்கில்ஊரணி, குமிழந்தாவு, பாா்த்திபனூா், சூடியூா், வண்ணான்ஓடை உள்ளிட்ட பகுதி தேவாலயங்களிலும் பிராா்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

மானாமதுரை சி.எஸ்.ஐ. தேவாலயம், இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவா் ஆலயங்களில் நடந்த புத்தாண்டு பிராா்த்தனை திருப்பலியில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT