சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அதி நவீன அறிவியல் ஆய்வகங்களை பொதுமக்கள், மாணவா்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 28) பாா்வையிடலாம்.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி இந்தப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் வளாகத்தில் அதி நவீன உபகரணங்களின் செயல்பாடு, அறிவியல் சோதனைகள் குறித்த செயல் விளக்கம், நவீன சோதனைக் கூட கண்காட்சி ஆகியவை நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வை பல்கலைக்கழகத் துணை வேந்தா் க. ரவி தொடங்கி வைக்கிறாா். காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிடலாம். இதற்கான அனுமதி இலவசம். இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகப் பதிவாளா் (பொறுப்பு) சு. ராஜமோகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஜெ. ஜெயகாந்தன், அமைப்புச் செயலாளா் பா. வசீகரன் ஆகியோா் தெரிவித்தனா்.