புதுதில்லி: நாட்டின் நிலக்கரி உற்பத்தி 2023 ஏப்ரலில் 8.5 சதவீதம் அதிகரித்து 7.314 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
தரவுகளின்படி 2022 ஏப்ரலில், நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 67.20 மெட்ரிக் டன்னாக இருந்தது. அதே வேளையில் ஏப்ரல் 2023 க்கான 77.08 மெட்ரிக் டன் உற்பத்தி இலக்கில் இந்தியா 94.89 சதவீதத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோல் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இணைந்து 57.57 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளன. இது ஏப்ரல் 2022ல் 53.47 மெட்ரிக் டன்னை விட 7.67 சதவீதம் அதிகமாகும்.
சிங்கரேனி நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 4.77 சதவீதம் உயர்ந்து 5.57 மெட்ரிக் டன்னாக இருந்தது. மற்ற கேப்டிவ் சுரங்கங்களிலிருந்து உற்பத்தி 10 மெட்ரிக் டன்னாக இருந்தபோதிலும், ஏப்ரல் 2022ல் 8.41 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது 18.93 சதவீத உயர்வைப் பதிவு செய்தது.
ஏப்ரல் 2023ல் 82.26 மெட்ரிக் டன் இலக்கில், இந்தியாவின் நிலக்கரி ஏற்றுமதி 80.35 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது ஏப்ரல் 2022ல் 71.96 மெட்ரிக் டன்னில் இருந்து 11.66 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகின் முதல் ஐந்து நிலக்கரி உற்பத்தி நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற போதிலும் உலர் எரிபொருளின் முக்கிய நுகர்வோரில் இந்தியா இருப்பதால், நிலக்கரி தேவையின் சில பகுதிகள் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.