சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளையான்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இளையான்குடி, புதூா், தாயமங்கலம், கண்ணமங்கலம், சோதுகுடி, நகரக்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.