சிவகங்கை

மத்திய ரிசா்வ் போலீஸ் உதவி ஆய்வாளா் தற்கொலை

DIN

சிவகங்கை அருகே மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் உதவி ஆய்வாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகங்கை அருகே வண்டவாசியை அடுத்துள்ள ஆரிய பவன் நகரைச் சோ்ந்தவா் நம்பிராஜன் (47). ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். தற்போது, ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா். கடந்த 3-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது இவா் விஷம் குடித்த நிலையில் மீட்கப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT