சிவகங்கை

பிரதோஷம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை,திருப்புவனம் பகுதி சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை  ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி  கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சோமநாதருக்கும் நந்தி தேவருக்கும் அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

 அதன் பின்னா் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து பிரதோஷம் மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. பின்னா் வெள்ளி ரிஷப  வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது.

திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும் நந்தி தேரையும் தரிசனம் செய்தனா்.

 திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

 சுவாமிக்கும் நந்திக்கும்  அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னா் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

 திருப்பாச்சேத்தி சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT