சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
திருப்பத்தூா் புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் ஆலயத்தில் பிரதோஷ விழாவையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவா் லிங்கத்திற்கும் அபிஷேகம் ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டனா்.
அதேபோல் ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு முதலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், திருநீறு, தேன், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து மூலவராகிய சிவபெருமானுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து நந்தீஸ்வரரும் மூலவரும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். . இதேபோல் திருத்தளிநாதா் ஆலயத்திலும் நந்தீஸ்வரருக்கும் சிவனுக்கும் அபிஷேக ஆரதனைகள் நடைபெற்று உற்சவா் திருவீதி உலா நடைபெற்றது. இதல் ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனா்.