வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், உரிமம் பெற்ற உணவகங்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.