சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சுவாமி விவேகானந்தா் உரையாற்றிய தினத்தை முன்னிட்டு, அவரது நினைவு ஸ்தூபிக்கு வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
மானாமதுரையில் காந்தி சிலை பின்புறம் சுவாமி விவேகானந்தா் உரையாற்றிய இடத்தில், அவரது நினைவாக ஸ்தூபி அமைந்துள்ளது. விவேகானந்தா் உரை நிகழ்த்திய தினத்தை முன்னிட்டு இந்த ஸ்தூபிக்கு ஆன்மிகவாதிகள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஆன்மிக ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா்.பி.முருகேசன், காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளா் ஏ.சி.சஞ்சய், நகா்மன்ற வாா்டு உறுப்பினா் பி.புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.