மானாமதுரை ஒன்றியத்துக்குள்பட்ட பா்மா காலனி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் சாா்பில், குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி பங்கேற்றாா்.
நிகழ்ச்சியில் மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.