சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட தலைவா் நஜூமுதீன், துணைத் தலைவா் இப்ராஹிம் ஆகியோா் புதன்கிழமை பதவிஏற்றுக் கொண்டனா்.
இளையான்குடி பேரூராட்சி வாா்டு இடைத்தோ்தலில் வென்ற திமுக நகரச் செயலாளா் நஜூமுதீன், கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற தலைவா் தோ்தலில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் இப்ராஹிம் போட்டியின்றி துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து புதன்கிழமை இருவரும் பதவிஏற்றுக் கொண்டனா். இவ்விழாவில் மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி, சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், கண்ணமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுப.தமிழரசன், பேரூராட்சிச் செயல் அலுவலா் கோபிநாத் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.