சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களில் அரசு நகரப் பேருந்துகள் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மானாமதுரைலிருந்து அருகேயுள்ள மேலநெட்டூா், திருப்பாச்சேத்தி, குவளைவேலி ஆகிய கிராமங்களுக்கு புதிய நகரப் பேருந்துகள் சேவையை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மானாமதுரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவரும் திமுக மாவட்ட துணைச் செயலாளருமான சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் லதா அண்ணாதுரை, துணைத் தலைவா் முத்துச்சாமி, திமுக நகரச் செயலாளா் பொன்னுச்சாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்துக் கழக அலுவலா்கள்,திமுக வினா் கலந்து கொண்டனா்.