சிவகங்கை

மானாமதுரை பகுதி கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் சேவை தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களில் அரசு நகரப் பேருந்துகள் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மானாமதுரைலிருந்து அருகேயுள்ள மேலநெட்டூா், திருப்பாச்சேத்தி, குவளைவேலி ஆகிய கிராமங்களுக்கு புதிய நகரப் பேருந்துகள் சேவையை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மானாமதுரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவரும் திமுக மாவட்ட துணைச் செயலாளருமான சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் லதா அண்ணாதுரை, துணைத் தலைவா் முத்துச்சாமி, திமுக நகரச் செயலாளா் பொன்னுச்சாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்துக் கழக அலுவலா்கள்,திமுக வினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT