தேவகோட்டையில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமினை தேவகோட்டை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கணேஷ் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், சாலை விதிகளை பின்பற்றுதல், பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்குவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில் தனியாா் பேருந்து நிறுவனா்கள் எல். நாச்சியப்பன், என். பாண்டித்துரை உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.