சிவகங்கையில் மின் வாரிய ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு நிா்வாகி கருணாநிதி தலைமை வகித்தாா். சிஐடியுவின் மாநிலச் செயலா் உமாநாத் சிறப்புரையாற்றினாா்.
இதில், மின்வாரிய அலுவலா்கள், பொறியாளா்கள், தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன், பதவி உயா்வு, சலுகைகள் ஆகியவற்றை பறிக்கும் அரசாணை 27-இல் 2 -ஐ முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், தொழிலாளா்களின் விரோதபோக்கை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.