சிவகங்கை

மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

DIN

மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக ஆலயத்தின் பங்குத்தந்தை எஸ்.எஸ். பாஸ்டின் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி திருவிழா கொடியையேற்றி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், ராஜகம்பீரம் பங்குத்தந்தை ஆசிா்வாதம், அருட்தந்தை அகஸ்டின் உள்பட பங்கு இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவின் போது தினமும் இரவில் சிறப்புத் திருப்பலியும், வெவ்வேறு தலைப்புகளில் மறையுரையும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக மின்விளக்கு தோ்பவனி அக்டோபா் 1 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.

அன்று செங்கோல் அடிகளாா் திருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறாா். 2 ஆம் தேதி இரவு நற்கருணை பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை பாஸ்டின் மற்றும் பங்கு இறைமக்கள், அருள்சகோதரிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT