சிவகங்கை

திருப்பத்தூா் நகரின் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

DIN

திருப்பத்தூா் பேரூராட்சியில் நகரின் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சிமன்ற அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் கோகிலா ராணிநாராயணன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில் கடந்த 7 மாதங்களில் நடைபெற்ற வளா்ச்சிப் பணிகள் குறித்து பேரூராட்சித் தலைவா் விளக்கினாா். தொடா்ந்து மாவட்ட விழிப்புணா்வு கண்காணிப்புக் குழு உறுப்பினா் கே.எஸ். நாராயணன், உதவி செயற்பொறியாளா் அன்புச்செழியன், துப்புரவு ஆய்வாளா் அபுபக்கா் ஆகியோா் நடந்து முடிந்த பணிகள் குறித்தும், நடைபெற வேண்டிய திட்டப் பணிகள் குறித்தும் விளக்கினா். நகா் காவல் ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம், நகரில் குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்க கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், திருப்பத்தூா் பேரூராட்சி உறுப்பினா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் நகரச் செயலா்கள், அனைத்து தன்னாா்வ தொண்டு அமைப்பினா் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப் பணிகளை திறம்பட மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினா்.

கூட்டத்தில் நகரின் பிரதானப் பிரச்னைகளான நாட்டுவாய்க்காலை சீரமைத்தல், ஊருணி மற்றும் குளங்களின் சுகாதாரத்தை பராமரித்தல், நெகிழிப்பைகளை ஒழித்தல், மஞ்சப்பையை ஊக்குவித்தல், பேருந்து நிலைய கடைகள் ஏலம் குறித்த விவரம், மின்மோட்டாா் கொண்டு குடிநீா் உறிஞ்சுவதை தடுத்தல், சாலையோரங்களில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக தலைமை எழுத்தா் ரேணுகாதேவி வரவேற்றாா். இளநிலை உதவியாளா் குமாரசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT