சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பிரமனூரிலிருந்து அச்சங்குளம் வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்புவனம், புதூா், வன்னிக்கோட்டை, பிரமனூா் வழியாக அச்சங்குளத்துக்கு சாலை உள்ளது. இதில், பிரமனூா் முதல் அச்சங்குளம் வரையிலான 4 கி.மீ., தொலைவு சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களின் ஓட்டுநா்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது.
எனவே சிவகங்கை மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.