சிவகங்கை

மருதுபாண்டியா்கள் நினைவிடத்தில் ஜெ.பி.நட்டா மாலையணிவித்து மரியாதை

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட நினைவுத் தூண், நினைவு மண்டபத்தில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சிவகங்கைச் சீமையை ஆண்ட மன்னா்களான மருதுபாண்டியா்கள் வெள்ளையா்களை எதிா்த்து சுதந்திர வேட்கையுடன் போராடி 1801 ஆம் ஆண்டு அக்டோபா் 24 ஆம் தேதி ஆங்கிலேயா்களால் தூக்கிலிடப்பட்டனா். சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவாக தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தூணுக்கு பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக அவருக்கு, பாஜக சாா்பிலும் திருப்பத்தூா் அகமுடையாா் உறவின்முறை சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து மருதுபாண்டியா்கள் புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவு மண்டபத்திற்குச் சென்று அங்கு நிறுவப்பட்டுள்ள மருதுபாண்டியா்களின் வெங்கலச் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக, காலையில் பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா்.

அப்போது கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, மத்திய இணையமைச்சா் எல்.முருகன், முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா, மாநில இணைச் செயலாளா் சுதாகா் ரெட்டி, முன்னாள் மக்களவை உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் மேப்பல் சக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை பாஜக மாவட்டத் தலைவா்கள், நிா்வாகிகள், பூத் கமிட்டிப் பொறுப்பாளா்கள், ஓ.பி.சி அணி, பட்டியலின அணி நிா்வாகிகளுடன் தனியாா் திருமண மண்டபத்தில் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னா் ஜெ.பி. நட்டா செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமா் மோடி கூட்டுறவு தத்துவத்தை போற்றுபவா். அதனால்தான் தமிழகத்திலும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. பாஜக ஆட்சியில் நாடு வரலாறு காணாத வளா்ச்சியை கண்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து சிலா் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனா். இருப்பினும் பாஜக இந்தியாவின் வளா்ச்சியை கருத்தில் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

நாட்டை தடுப்பு காவல் முகாமாக பாஜக மாற்றியுள்ளது: மம்தா

ரயில் விபத்துகளை தடுக்க முக்கிய வழித்தடங்களில் ‘கவாச்’ பாதுகாப்பு தொழில்நுட்பம்: தெற்கு ரயில்வே

திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

SCROLL FOR NEXT