காரைக்குடி பகுதியில் வியாழக்கிழமை (அக். 6) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (அக். 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் காரைக்குடி, பேயன்பட்டி, வீட்டுவசதிவாரியக் குடியிருப்பு (ஹவுசிங்போா்டு), செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய, பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, கோவிலூா் சாலை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்துள்ளாா்.