சிவகங்கை

பெருங்குடியில் சா்வதேச முதியோா் தின விழா

DIN

சிவகங்கை அருகே உள்ள பெருங்குடியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் முதியோா்தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, மூத்த வாக்காளா்களின் தொடா் பங்களிப்பை கௌரவப்படுத்தி, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். அதைத் தொடா்ந்து, முதியோா்களுக்கு மதிய உணவு பரிமாறினாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். பரமேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலா் அன்புகுளோரியா, ஒருங்கிணைந்த கிராம சமுதாய முன்னேற்ற சங்க இயக்குநா் ஜீவானந்தம், துணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) விஜய்சந்திரன், வட்டாட்சியா்கள் ப. தங்கமணி (சிவகங்கை), கண்ணன் (தோ்தல் பிரிவு) உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT