சிவகங்கை

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீ ராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரியின் சாா்பில் போதைப்பொருள் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சோமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து இந்த ஊா்வலத்தை உதவி ஆய்வாளா்கள் மைக்கேல் ராஜ், கவிதா ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். ஊா்வலத்துக்கு மகளிா் கல்வியியல் கல்லூரி முதல்வா் கே. சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி முதல்வா் கே. அங்கையா்கன்னி முன்னிலை வகித்தாா். கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற இந்த ஊா்வலத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உதவிப் பேராசிரியா் கே. செல்வகணேசன், தொடா்பு அலுவலா் ஏகோஜிராவ், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT