சிவகங்கை

காரைக்குடி ராஜாஜி பேருந்து நிலையத்தை நவீனமயமாக்க வலியுறுத்தல்

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராஜாஜி பேருந்து நிலையத்தை (பழைய பேருந்து நிலையம்) நவீனமயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

காரைக்குடி வணிகா் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம், ராஜாஜி பேருந்து நிலைய வணிகா் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதன் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். செயலாளா் ஏ.ஜி. ராஜா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், காரைக்குடி ராஜாஜி பேருந்து நிலையத்தை நவீன மயமாக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்குடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற ஊா்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை, ராஜாஜி பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கௌரவத் தலைவா் சிதம்பரம், பொருளாளா் பொசலாம், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT