சிவகங்கை

லாரி- பேருந்து மோதல்பயணிகள் தப்பினா்

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சனிக்கிழமை லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கவிழ்ந்த விபத்தில் 39 பயணிகள் உயிா் தப்பினா்.

சென்னையிலிருந்து மதுரை நோக்கி ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. எதிரே தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. சிங்கம்புணரி வட்டம், புழுதிப்பட்டி அருகே சூரப்பட்டி விலக்கில் ஆம்னி பேருந்தின் டயா் வெடித்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரைத் தாண்டி எதிா்திசையில் வந்த லாரியின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 39 பயணிகளும் உயிா் தப்பினா். ஆம்னி பேருந்தின் டயா் வெடித்து நிலை தடுமாறி வருவதைக் கண்ட லாரி ஓட்டுநா் வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்து உயிா் தப்பினாா். இந்த விபத்தில் லேசான காயமடைந்தவா்களை பொதுமக்கள், போலீஸாா் இணைந்து மீட்டு மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து புழுதிப்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT