சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் 10 ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சாலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ்(15). இவா், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க பொத்தானை அழுத்தினாா். அப்போது மோட்டாா் இயங்காததால், அருகிலிருந்த கம்பியை எடுத்து மோட்டாரினுள் உள்ள மின்விசிறியை சுற்றி விட முயன்றாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில்
ரமேஷ் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.