சிவகங்கை

தூய்மைக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள்:வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு

DIN

காரைக்குடி நகராட்சி சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தூய்மைக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், எனது குப்பை, எனது பொறுப்பு என்ற தலைப்பில் தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்துக் கொடுக்கும் தூய்மைப் பணியாளா்களுக்கும், இந்த விழிப்புணா்வுக்கு துணை நின்ற நிறுவனங்களுக்கும் நகா் மன்றத் தலைவா் சே. முத்துத்துரை பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் லட்சுமணன், நகா் நல அலுவலா், பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே நேரத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட 10 தொகுதிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

மாநில அந்தஸ்து: காங்கிரஸுக்கு அதிமுக கேள்வி

புதுவையின் உரிமையை பெற்றுத் தராமல் ஏமாற்றிய தேசிய, மாநிலக் கட்சிகள்: சீமான் குற்றச்சாட்டு

சாலைப் பணிகளைக் கூட நிறைவேற்றாத காங்கிரஸ் அரசு: என்.ரங்கசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT