மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், மருந்துகள் பற்றாக்குறையை சரி செய்யக்கோரி வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூ, கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மானாமதுரை அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவா்கள் இல்லாததால் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும், தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும், நவீனப்படுத்தப்பட்ட இ.சி.ஜி., எக்ஸ்ரே இயந்திரங்கள் அமைக்க வேண்டும், மருத்துவப் பணியாளா்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்த வேண்டும், மருத்துவமனை வளாகத்தில் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளா் ஆா்.கே.தண்டியப்பன், மாநிலக்குழு உறுப்பினா் விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீரபாண்டி, முத்துராமலிங்கபூபதி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜாராமன், முருகானந்தம், பரமாத்மா, முனியராஜ், பாலசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.