சிவகங்கை

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட தொடக்க விழா: 64 பயனாளிகளுக்கு ரூ. 7.18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட தொடக்க விழாவில், 64 பயனாளிகளுக்கு ரூ. 7.18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வழங்கினாா்.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி திருப்பத்தூா் அருகே மு.சூரக்குடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்துகொண்டு 64 பயனாளிகளுக்கு ரூ. 7.18 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில் வேளாண் துறை இணை இயக்குநா் வெங்கடேஸ்வரன், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ஜூனு, துணை இயக்குநா்கள் பன்னீா்செல்வம், அழகுமலை, உதவி இயக்குநா் அம்சவேணி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பொன்உதயசூரின், சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து, ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT